இராவணனின் மகன்- இந்திரஜித்
தீவிர சிவபக்தனான இராவணன், ஜோதிடத்திலும் தேர்ந்தவன்.சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகங்களை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கும் வரத்தை பெற்றிருந்தான்.அக்காரணத்தினால் மண்டோதரி கர்பமாக இருக்கும் போது 7கிரகத்தையும் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அமர வைக்கிறான்.ராமாயண காலத்தில் ராகுவும் கேதுவும் கிரக அந்தஸ்து பெறவில்லை.ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியை குறிக்கும்.அவ்வீட்டில் அனைத்து கிரகங்களும் இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தை தோல்வி அற்றவனாக விளங்கும்.அதை நன்குணர்ந்து சனி கிரகம் மட்டும் குழந்தை பிறக்கும் சமயத்தில் தனது ஒரு காலை 12ம்வீட்டில் வைத்துவிட்டது.ஜாதகத்தில் 12ம் வீடு வீழ்ச்சியை குறிக்கும். சனியின் செயலால் கடுங்கோபம் கொண்ட இராவணன் சனியின் காலை வெட்டி வீழ்த்தினான்.சனியின் வெட்டப்பட்ட கால் குழந்தையின் இலக்கின பாகத்தில் விழுந்தது.அது மாந்தி என அழைக்கப்பட்டது.அதுவே மேகநாதன் இறப்புக்கும் காரணமாக மாறியது.இன்றளவும் ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருப்பது மரணத்தை குறிப்பதாக அமைகிறது.இராவணன் பிறந்த குழந்தைக்கு மேகநாதன் என பெயர் சூட