இராவணனின் மகன்- இந்திரஜித்

                  தீவிர சிவபக்தனான இராவணன், ஜோதிடத்திலும் தேர்ந்தவன்.சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகங்களை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கும் வரத்தை பெற்றிருந்தான்.அக்காரணத்தினால் மண்டோதரி கர்பமாக இருக்கும் போது 7கிரகத்தையும் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அமர வைக்கிறான்.ராமாயண காலத்தில் ராகுவும் கேதுவும் கிரக அந்தஸ்து பெறவில்லை.ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியை குறிக்கும்.அவ்வீட்டில் அனைத்து கிரகங்களும் இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தை தோல்வி அற்றவனாக விளங்கும்.அதை நன்குணர்ந்து சனி கிரகம் மட்டும் குழந்தை பிறக்கும் சமயத்தில் தனது ஒரு காலை 12ம்வீட்டில் வைத்துவிட்டது.ஜாதகத்தில் 12ம் வீடு வீழ்ச்சியை குறிக்கும்.
                 சனியின் செயலால் கடுங்கோபம் கொண்ட இராவணன் சனியின் காலை வெட்டி வீழ்த்தினான்.சனியின் வெட்டப்பட்ட கால் குழந்தையின் இலக்கின பாகத்தில் விழுந்தது.அது மாந்தி என அழைக்கப்பட்டது.அதுவே மேகநாதன் இறப்புக்கும் காரணமாக மாறியது.இன்றளவும் ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருப்பது மரணத்தை குறிப்பதாக அமைகிறது.இராவணன் பிறந்த குழந்தைக்கு மேகநாதன் என பெயர் சூட்டினார்.
               இராவணன் மகனான மேகநாதன் இந்திரனை வெற்றி பெற்றதால் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான்.பிரமதேவரின் பிரம்மாஸ்திரம், விஷ்ணுவின் நாராயண அஸ்திரம், சிவனின் பாசுபதாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களை ஒருசேர பெற்றவன்.இவ்மூன்று அஸ்திரத்தையும் பெற்றவர்கள் ராமாயணத்தில் இந்திரஜித்தும், மகாபாரதத்தில் அஸ்வத்தாமன் ஆகிய இவர்கள் இருவரே.

                      மேலும் பிரம்மனிடம் கடுந்தவம் புரிந்து,14ஆண்டுகள் உறங்காமல், திருமணம் ஆகியும் பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் நேரிட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.நடைமுறைக்கு சாத்தியமற்ற இவ்வரத்தால் அவனை ராமனால் கூட வீழ்த்த முடியவில்லை.ராமாயண இறுதி யுத்தத்தில் ராமரின் படையை பெருமளவு சிதறடித்த பெருமை இவனையே சாரும்.
                                                                                                        இந்திரஜித்,நாகாஸ்திரத்தால் ராமர் மற்றும் லெட்சுமணனை வீழ்த்தினான்.பின் இருவரும் கருடன் உதவியில் உயிர் பிழைத்தனர்.மற்றொரு முறை பிரம்மாஸ்திரம் கொண்டு லெட்சுமணனை வீழ்த்தினான்.அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகையால் உயிர் தப்பினான் லெட்சுமணன்.இராவணனை விட வேகமாய் செயல்படும் இந்திரஜித்தால், ராமர் படைக்கு அதிக போராட்டமாய் போனது.
                         பின் அனைவரும் ராவணனின் சகோதரனான விபீஷணனின் உதவியை நாடினர்.விபீஷணன், ராமரிடம் இந்திரஜித் பிரம்மனிடம் வாங்கிய வரம்பற்றி எடுத்துரைக்கிறான்.இவ்வரத்தை அறிந்த ராமர் மனமுடைகிறார்.இப்படி பட்ட வரத்தை வாங்கிய வீரனை வீழ்த்த வல்ல ஒருவனை போர்களத்தில் எங்கு சென்று தேடுவேன் என்று புலம்பத்தொடங்கினார்.அப்போது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக லெட்சுமணன்,கலங்காதே அண்ணா நான் இருக்கிறேன்,நாம் மேற்கொண்ட 14வருட வனவாசத்தில் உன் குடிலுக்கு காவல் காக்கும் பொருட்டு நான் தூங்காமல் விழித்திருந்தேன்.மேலும் திருமணம் முடிந்த உடனே வனவாசத்தில் உன்னுடன் வந்ததால் பிரம்மச்சரியாக வாழ்கிறேன்.இக்காரணத்தால் இந்திரஜித்தை என்னால் வீழ்த்த முடியும் என்று அண்ணனுக்கு நம்பிக்கை அளிக்கிறான்.
                          மறுநாள் போர்களத்தில் கடுமையான போர் தொடங்கியது.ஆரம்பத்தில் இந்திரஜித் கை ஓங்கியிருந்தாலும் இறுதியில் லட்சுமணனால் வதைக்கப்பட்டான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

                         ‌நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ