உங்கள் குழந்தையும் V.I.P ஆக வேண்டுமா இதோ 10வகையான டிப்ஸ்.

                 5ல் வளையாதது 50ல் வளையுமா?ஆகவே கீழ்காணும் 10பழக்க வழக்கங்கள் உங்கள் குழந்தைகள் கடைப்பிடிக்க கற்று கொடுத்தால் நிச்சயம் அவர்கள் V.I.P தான்
1.இறை நம்பிக்கை
                    முதலில் உங்கள் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டுங்கள்.நீங்க எந்த மதமாக இருந்தாலும் சரி கடவுள் நம்பிக்கை உங்கள் குழந்தைகளை சரியான பாதையில் நடக்க தூண்டும்.கடவுள் மறுப்பை குழந்தைகளுக்கு திணிக்கும் பட்சத்தில் நிச்சயமாக சமுதாயத்தில் ஒரு கேடுகெட்ட பிறவியாய் பிற்காலத்தில் உருவெடுக்கும்.
2. தூங்கும் பழக்கம்
                        நிச்சயமாக உங்கள் குழந்தைக்கு இப்பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தி விட வேண்டும்.அதிலேயே உங்கள் குழந்தையின் எதிர்காலம் அடங்கியுள்ளது.இரவு 10 மணிக்குள் உறங்கி காலை 6மணிக்குள் விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.இதனால் குழந்தை அமைதியான மனநிலையுடனும் ஆரோக்கியமான உடல் திறனையும் பெற்று வளரதுடங்கும்.
3.உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு
                            இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு சின்ன சின்ன உடற்பயிற்சி கற்று கொடுங்கள்.குறைந்த பட்சம் தோப்புக்கரணம், நடைப்பயிற்சி செய்ய பழக்குங்கள்.கண்டிப்பாக தினமும்(outdoor games) வீட்டைவிட்டு வெளியே சென்று குறைந்த பட்சம் 1/2 மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.நோய்எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.சிறு தானியங்கள் சாப்பிட பழக்குங்கள்.
4. சூரிய நமஸ்காரம் மற்றும் யோகா
                           உலக உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரம் சூரியன் தான்.இதற்கு எவ்வித மதச்சாயமும் பூசத் தேவையில்லை.அக்காரணத்தினாலே பொங்கல் திருநாள் இந்துக்கள் பண்டிகையாக இல்லாமல் தமிழர் திருநாளானது.ஆதலால் அனைத்து மதத்தினரும் இவ்விரு பயிற்சியையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
5.சிறு சிறு தோல்வி
                            இப்பழக்கம் இக்கால குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஏற்படுத்தியாக வேண்டும்.புயல் காற்றில் வளைந்து கொடுக்கும் புல்லைப் போன்று அதுவே அதன் பிற்கால வாழ்விற்கு பலனளிக்கும்.இன்று தற்கொலைகள் அதிகரிக்க காரணம், அனைத்தும் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை டீன் ஏஜ் பருவத்தில் கிடைக்காத அன்பிற்கு(LOVE) இறப்பை தேர்வு செய்கிறது.நிராகரிப்பை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.இது பெற்றோர்களின் குற்றம் தான்.உங்கள் குழந்தை சாக்லேட் கேட்கிறதா? உங்களால் முடிந்தும் வாங்கி தர வேண்டாம்.இரண்டொரு நாள் கழித்து வாங்கி தரலாம்.பொறுமை மற்றும் காத்திருப்பு பயிற்சியை வழங்குங்கள்.உங்கள் வருமானத்தை குழந்தைகளிடம் மறைக்க முயற்சிக்க கூடாது.வசதியான குழந்தையாக இருப்பினும் பணத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும்.
6.பிற உயிரை நேசித்தல்
                              ஒரு ஆண் எதிர்பாலினமாக இருந்தாலும் தன் தாய் மற்றும் சகோதரியை பார்ப்பது போன்று பிற பெண்களை பார்ப்பதில்லை.இது ஒரு பெண்ணிற்கும் பொருந்தும்.எதிர்பாலின பாகுபாடு பற்றியும் அவர்களிடம் கட்டுப்பாட்டோடு பழகும் முறைபற்றியும் எடுத்துரைக்கலாம்.பிற்கால பாலியல் வன்முறைக்கு இது முடிவு கட்டுவதாக அமைந்து நட்புடன் பழகத்துடங்கும் ஒரு உன்னத சமுதாயம் உருவாகும்.வசதியான குழந்தையாக இருப்பின் பணியாளரிடம் மரியாதையாக நடக்க அறிவுருத்தலாம்.இது பிற்காலத்தில் அவர்களின் பிசினஸ் வாழ்க்கைக்கு உதவும்.எதிர்காலத்தில் வேலையாட்களை நிர்வகிக்கும் ஆற்றலை பெற உதவும்.பிற உயிர்கள் என்றால் மனிதன் மட்டுமின்றி பிற உயிர்களும் அடங்கும்.ஆகவே ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்கும் பொறுப்பை அளிக்கலாம்.பறவைகளுக்கு தானியம், நீர் வழங்க உதவலாம்.அது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.
7.கலைகள் பல கற்றல்
                               ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது போன்று வெறும் பள்ளி படிப்பை மட்டும் திணிக்காமல் பிற கலைகளையும் கற்றுக் கொடுங்கள்.அக்காலத்தில் குருகுல கல்வி முறை என்று ஒன்று உண்டு.அதாவது ஆசிரியரிடம் பல மாணவர்கள் பயில்வார்கள், ஆசிரியர் அக்குழந்தைகளிடம் பழகி எக்குழந்தை எதில் வல்லவனாக இருக்கிறதோ, அக்குழந்தைக்கு அதில் பயிற்சி அளித்து சிறப்படைய செய்வார்.உதரணமாக ஒரு குழந்தைக்கு மருத்துவத்தில் ஈடுபாடு இருக்கலாம், ஒரு குழந்தை வாள்வீச்சில் கெட்டியாக இருக்கும்.இதை இருவருக்கும் மாற்றி கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்கும்.இதுவே இக்கால கல்வி முறை.இறைவனின் படைப்பில் அனைவரும் திறமையானவர்களே.ஆனால் எதில் என்பதை மட்டும் நாம் தேட முயற்சிக்க வேண்டும்.ஒரே கல்வி முறையை கொண்டு அனைத்து குழந்தைகளின் திறமையை தீர்மானிப்பது தவறான நடைமுறை.அக்காரணத்தினாலே இன்று வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பலரும் பள்ளி படிப்பையே தாண்டாதவர்கள்.குறைந்த பட்சம் நீச்சல் மற்றும் கம்புயூட்டர் பயிற்சியாவது அளியுங்கள்.
8.மொழியறிவு
                               குறைந்த பட்சம் தாய் மொழியோடு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இந்திய குழந்தைகளுக்கு அவசியம்.அது தெரிய விடாமல் இன்று பலகட்சிகளும் கொடிபிடிக்கின்றன.அதற்கான காரணம் நம்மை போன்றே நமது குழந்தைகளையும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்து அடிமையாக்கத்தான்.அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரம் உலகறியும்.உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.அவர்களை போன்றே ஹிந்தி எதிர்ப்பு கோசம் போட்டு கொண்டே கட்டாயம் கற்றுக் கொடுங்கள்.அவர்கள் பிள்ளைகள் கற்றுக் கொள்கிறது என்றால் உங்கள் பிள்ளைகளாலும் கட்டாயம் முடியும்.இங்கே யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.
9.புகழ்ச்சி
                            நீங்கள் கூறும் புகழ்ச்சி சாதிக்கும் வெறியை குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் குழந்தைகளை மட்டம் தட்டவோ,பிற குழந்தைகளிடம் ஒப்பிட்டு பேசவோ கூடாது.முடிந்தவரை பாசிட்டிவாக ஊக்குவிக்க வேண்டும்.எத்தனை காலம் தான் நீங்கள் தலையையும்,தளபதியையும் புகழ்வீர்கள்.அவர்களின் குழந்தைகளை அடுத்த தல, அடுத்த தளபதி என்று புகழ்வதை நிறுத்தி விட்டு உங்கள் குழந்தையை அவ்விடத்திற்கு உயர்த்துங்கள்.இது சினிமா துறைக்கு மட்டும் அல்ல அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
10. மகிழ்ச்சியான மனநிலை
                               பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிடுவதை சுத்தமாக நிறுத்த வேண்டும்.உங்கள் வேலைகளுக்கிடையில் அந்த பிஞ்சுகளுக்கும் நேரத்தை செலவழியுங்கள்.அருகில் உள்ள கோவில்கள், உணவகங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.மாதம் ஒரு முறை சின்ன சின்ன சுற்றுலா கூட்டிச் செல்லுங்கள்.


                          வெறும் பள்ளி பாடத்தை மட்டும் கட்டி அழுவாமல் உங்கள் குழந்தை உங்களுக்கு ஸ்பெஷல்,அதை உணர்ந்து செயல்படுங்கள்.இந்த 10டிப்ஸையும் பாலோ செய்தால் உங்கள் குழந்தையும் எதிர்கால சூப்பர் ஸ்டார் தான்.


                           நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ