யார் இந்த போரிஷ்கா?( டைம் டிராவலர்)

                  முன்ஜென்மத்தில் நான் செவ்வாய் கிரகத்தில் வசித்தேன் இன்றும் அந்நினைவு எனக்கு நன்றாக நியாபகம் இருக்கின்றது என்று கூறும் போரிஸ்கா பற்றி தான் இப்பதிவில் அறியப்போகின்றோம்.

                  ரஷ்யாவில்,செரினோவிஸ்க் நகரத்தில் ஜனவரி11,1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியா கோவிச்.பிறந்த சில நாள்களிலேயே அம்மா,அப்பா என அழைக்கத் தொடங்கியுள்ளான்.சில மாதங்களிலே நடக்கவும் தொடங்க பெற்றோர்கள் ஆச்சர்யமும்,அதிர்ச்சியும் அடைந்தனர்.இரண்டு வயதில் கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல்,நினைவுத்திறன்,சுட்டித்தனம் போன்றவை மிகவும் அசாதாரணமாக இருந்தது.
                    சில நேரங்களில் சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய்கிரகம்,அங்கு நிலவிய வாழ்க்கை முறை,இதர கிரக அமைப்புகள் பற்றியும் கூட விவரிக்கின்றான்.போரிஸ்கா,நான் செவ்வாய்கிரகத்தில் இருந்து வந்திருக்கின்றேன்,இன்றும் செவ்வாய் கிரகத்தில் இங்கு போல் மக்கள் அங்கும் வசிக்கின்றனர் என்கிறான்.அங்கு ஏற்பட்ட பயங்கரமான போரால் நாடுநகரங்கள் அழிந்து மிஞ்சி உள்ளவர்கள் பூமியின் அடியில் சுரங்கம் அமைத்து வசிப்பதாக தெறிவித்தான்.

                     செவ்வாய் கிரக மேற்பரப்பு முழுவதும் அனுஆயுதப் போரில் முற்றிலும் வாழத்தகுதி இழந்துவிட்டது என்கிறான்.நீங்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா?என்ற கேள்விக்கு, நான் வந்திருக்கிறேன் அப்பொழுது பூமியில் இரண்டு நாகரிகம் மட்டுமே பிரதானமானது, அங்குள்ள மக்கள் செவ்வாய் வாசிகள் போன்றே அதிநவீன அறிவுடையவர்களாக இருந்தனர், என்றான்.
                       அவன் கூறிய இரண்டு நாகரிகங்கள், ஒன்று எகிப்திய நாகரிகம், மற்றொன்று லெமுரியா நாகரிகம்.ஆம் இச்சிறுவன் கூறுவது லெமுரியா கண்டம் என்றழைக்கப்பட்ட ஆதி உயிரினம் தோன்றியதாக இன்றளவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் பெறிதும் நம்பப்படும் குமரிக்கண்டம் பற்றியதுதான்.குமரி கண்டத்தில் உள்ள மனிதர்கள் டெலிபோர்ட்டேசன் பயன்படுத்தி காலப்பயணம் செய்வதாக தெரிவித்தான்.இன்றுள்ள நவீன உலகத்தை விட பலமடங்கு சிறந்து விளங்கியதாக போரிஸ்கா கூறுகின்றான்.
                       மனிதர்கள் பற்றி பேசும் போது, எகிப்திய பிரமிடுகள் அருகில் உள்ள பீனிக்ஸ் என்னும் மனித தலை சிங்க உடல் கொண்ட சிலையின் காதுக்குள் உள்ள அறையை திறக்கும் மதிநுட்பத்தை இக்கால மனிதன் பெரும் போது மனிதகுலம் அடுத்த கட்டத்திற்கு பரிணாமம் அடையும் என்கிறான்.

                     தன்னை பற்றி கூறும் போது மேலும் ஒரு ஆச்சரியமான தகவலை தெரிவிக்கின்றான்.இவன் ஒரு பறக்கும் தட்டு டிரைவர் என்றும் இதன் மூலம் பூமிக்கு அடிக்கடி வந்து சென்றிருப்பதாகவும் குமரிக்கண்டம் அழியும் போது தான் பூமியில் இருந்ததாகவும் கூறுகின்றான்.பெரிய பெரிய மாடமாளிகைகள் ஆழி அலைகளால் தரைமட்டமாகின,என் புவி நண்பன் கண்முன்னே இறந்ததாக அறிவிக்கின்றான். 

                   அவன் கூற்றை நிஜமாக்கும் வகையில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நடந்த ஆராய்ச்சியில் அதன் மேற்பரப்பில் அதிகளவில் அணுக்கதிர் வீச்சு இருப்பதால் அணுஆயுத போர் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
                      இச்சிறுவன் கூற்றுப்படி பலகிரகங்களிலும் நம்மைவிட சிறந்த உயிரினங்கள் வாழும் பட்சத்தில், விண்வெளியை பொருத்த மட்டில் மனித இனம் ஒரு கத்துக்குட்டியாகவே உள்ளது.நாம் அதில் முன்னேறும் பொழுது நம் குழந்தைகள் ஏலியன்கள் பள்ளியில் அவர்கள் மொழியை கற்கலாம்.


                           நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ