இடுகைகள்

இரும்பு மனிதன் - புருஸ்லீ

படம்
20ம் நூற்றாண்டின் மிகுந்த செல்வாக்கான மனிதர் என்று டைம்ஸ் இதழால் புகழப்பட்ட புருஸ்லீ பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகின்றோம்.               குங்பூ கலையுடன்,உலகின் முன்னனி கலாச்சார சண்டை முறைகளை இணைத்து ஜி-குன்-டோ என்னும் புதிய தற்காப்பு கலையை உருவாக்கினார்.அதிவேகமான செயல்பாடுகளுக்கும்,அசாதாரமான அசைவுகளுக்கும் சொந்தக்காரர்.அற்புதமான திறமைகள் பலவற்றை பெற்றாலும், அவற்றில் எவராலும் இன்றளவும் முறியடிக்க முடியாத சில சாதனைகளைப் பற்றி கூறுகிறேன். அவரது பேமஸான சைடு கிக்கிங் என்னும் முறைப்படி 45கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை சிதறடிக்கும் திறன் கொண்டவர். லின்சாக் என்பது ஒருவகை தற்காப்பு கருவி . அதை இரண்டு கைகளிலும் ஒரே சமயத்தில் கைக்கு ஒன்றாக அதிவேகமாக சுற்றும் திறன் படைத்தவர். ஒரு நொடியில் 9 முறை கையாலும் , 6 முறை காலாலும் தாக்கும் திறன் படைத்தவர் .                      இவர் விடும் 1 inch punch மிகப் பிரபலம் .ஒரு inch இடைவெளியில் இவர் விடும் குத்தானது 80 கிலோ எடை கொண்ட ஒரு மனிதரை 15 அடி நகர்த்தும் சக்தி கொண்டது. இரண்டு கை கொண்டு 1500 முறையும் , ஒரு கை கொண்டு 400 முறையும்,

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

படம்
அங்கோர்வாட் என்பது கம்போடியாவில் உள்ள ஒரு இந்து கோவில் ஆகும். அங்கூர் என்றால் நகரம், வாட் என்றால் கோவில்.கோவில்களின் நகரம் என்பது அதன் பொருள். இன்றளவும் இதுவே மனிதன் உருவாக்கிய வழிபாட்டு தலங்களிலே மிகப்பெரியது . இதன் பரப்பளவு மட்டும் 400 ஏக்கர்.இதன் நான்கு பக்க சுவர்களும் தலா3.6 கிலோமீட்டர் நீளமுடையது என்றால் அதன் பரப்பளவை நினைத்து பாருங்கள். இரண்டாம் சூரிய வர்மன் என்ற மன்னரால் 12ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோவில் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டது.            பின் நாட்களில் இக்கோவில் புத்த வழிபாட்டு தளமாக மாறியது. இக்கோவில் கடவுள்களின் இருப்பிடமான மேரு மலையினை குறிப்பதாக உள்ளது. மேற்கத்தியர்கள் இக்கோவிலை ரோமானியர்கள் கட்டியிருக்கலாம் என நம்பிருந்தனர். இந்த கோவிலைச் சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு தூய்மையான நீர் ஓடக்கூடிய அகழி அமைந்துள்ளது .இக்கோவிலின் மூலவர் விஷ்ணு. பிரம்மா மற்றும் சந்திரனுக்கும் இங்கே வழிபாட்டு தலங்கள் உள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் போன்ற 20 கோவில்களை அங்கோர்வாட்டுக்குள் அடைக்

இராவணனின் மகன்- இந்திரஜித்

படம்
                  தீவிர சிவபக்தனான இராவணன், ஜோதிடத்திலும் தேர்ந்தவன்.சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகங்களை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கும் வரத்தை பெற்றிருந்தான்.அக்காரணத்தினால் மண்டோதரி கர்பமாக இருக்கும் போது 7கிரகத்தையும் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அமர வைக்கிறான்.ராமாயண காலத்தில் ராகுவும் கேதுவும் கிரக அந்தஸ்து பெறவில்லை.ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியை குறிக்கும்.அவ்வீட்டில் அனைத்து கிரகங்களும் இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தை தோல்வி அற்றவனாக விளங்கும்.அதை நன்குணர்ந்து சனி கிரகம் மட்டும் குழந்தை பிறக்கும் சமயத்தில் தனது ஒரு காலை 12ம்வீட்டில் வைத்துவிட்டது.ஜாதகத்தில் 12ம் வீடு வீழ்ச்சியை குறிக்கும்.                  சனியின் செயலால் கடுங்கோபம் கொண்ட இராவணன் சனியின் காலை வெட்டி வீழ்த்தினான்.சனியின் வெட்டப்பட்ட கால் குழந்தையின் இலக்கின பாகத்தில் விழுந்தது.அது மாந்தி என அழைக்கப்பட்டது.அதுவே மேகநாதன் இறப்புக்கும் காரணமாக மாறியது.இன்றளவும் ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருப்பது மரணத்தை குறிப்பதாக அமைகிறது.இராவணன் பிறந்த குழந்தைக்கு மேகநாதன் என பெயர் சூட

ராகு கேது உருவான வரலாறு தெரியுமா?

படம்
                   அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கிடையில் நடந்த தொடர்ச்சியான போரால் இருதரப்பினரும் சக்தி இழந்துவிட்டனர்.பின் நாரத  முனிவரின் ஆலோசனை படி இருதரப்பினரும் பாற்கடலை கடைவது என்று முடிவு செய்யப்பட்டது.திருமாலின் படுக்கையான ஆதிசேஷனின் சகோதரி வாசுகி பாம்பு சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து அவரின் கழுத்தை அலங்கரிக்கும் அதிகாரம் பெற்றது.அப்பாம்பை கயிராகவும்,மந்தாரமலை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர்.                      பாம்பின் வால் பகுதியை தேவர்களும், தலைப்பகுதியை அசுரர்களும் பிடித்து கடைந்தனர்.அவர்களின் முயற்சியால், அமிர்தம் கிடைத்தால் இருவருக்கும் சமமான பங்கு என்று முடிவு செய்யப்பட்டது.வெகுநேரம் கடைந்தப்பின் மந்தார மலை நழுவத் தொடங்கியது.அதைக்கண்ட திருமால் தனது 2வது அவதாரமான கூர்ம அவதாரத்தை எடுத்து மலையை தாங்கி பிடித்தார்.                        நெடுநேரத்திற்கு பின் முதல் முதலாக வெளிவந்தது ஆலகால விஷம்.அதைக்கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர்.மூவுலகமும் அழியும் அபாயம் ஏற்பட்டது.அதை தடுக்கும் பொருட்டு பரமன் விஷத்தை அருந்த தொடங்கினர்.விஷத்தால் ஈசனு

யார் இந்த போரிஷ்கா?( டைம் டிராவலர்)

படம்
                  முன்ஜென்மத்தில் நான் செவ்வாய் கிரகத்தில் வசித்தேன் இன்றும் அந்நினைவு எனக்கு நன்றாக நியாபகம் இருக்கின்றது என்று கூறும் போரிஸ்கா பற்றி தான் இப்பதிவில் அறியப்போகின்றோம்.                   ரஷ்யாவில்,செரினோவிஸ்க் நகரத்தில் ஜனவரி11,1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியா கோவிச்.பிறந்த சில நாள்களிலேயே அம்மா,அப்பா என அழைக்கத் தொடங்கியுள்ளான்.சில மாதங்களிலே நடக்கவும் தொடங்க பெற்றோர்கள் ஆச்சர்யமும்,அதிர்ச்சியும் அடைந்தனர்.இரண்டு வயதில் கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல்,நினைவுத்திறன்,சுட்டித்தனம் போன்றவை மிகவும் அசாதாரணமாக இருந்தது.                     சில நேரங்களில் சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய்கிரகம்,அங்கு நிலவிய வாழ்க்கை முறை,இதர கிரக அமைப்புகள் பற்றியும் கூட விவரிக்கின்றான்.போரிஸ்கா,நான் செவ்வாய்கிரகத்தில் இருந்து வந்திருக்கின்றேன்,இன்றும் செவ்வாய் கிரகத்தில் இங்கு போல் மக்கள் அங்கும் வசிக்கின்றனர் என்கிறான்.அங்கு ஏற்பட்ட பயங்கரமான போரால் நாடுநகரங்கள் அழிந்து மிஞ்சி உள்ளவர்கள் பூமியின் அடியில் சுரங்கம் அமைத்து வசிப்பதாக தெறிவித்தான்.

உங்கள் குழந்தையும் V.I.P ஆக வேண்டுமா இதோ 10வகையான டிப்ஸ்.

படம்
                 5ல் வளையாதது 50ல் வளையுமா?ஆகவே கீழ்காணும் 10பழக்க வழக்கங்கள் உங்கள் குழந்தைகள் கடைப்பிடிக்க கற்று கொடுத்தால் நிச்சயம் அவர்கள் V.I.P தான் 1. இறை நம்பிக்கை                     முதலில் உங்கள் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டுங்கள்.நீங்க எந்த மதமாக இருந்தாலும் சரி கடவுள் நம்பிக்கை உங்கள் குழந்தைகளை சரியான பாதையில் நடக்க தூண்டும்.கடவுள் மறுப்பை குழந்தைகளுக்கு திணிக்கும் பட்சத்தில் நிச்சயமாக சமுதாயத்தில் ஒரு கேடுகெட்ட பிறவியாய் பிற்காலத்தில் உருவெடுக்கும். 2. தூங்கும் பழக்கம்                         நிச்சயமாக உங்கள் குழந்தைக்கு இப்பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தி விட வேண்டும்.அதிலேயே உங்கள் குழந்தையின் எதிர்காலம் அடங்கியுள்ளது.இரவு 10 மணிக்குள் உறங்கி காலை 6மணிக்குள் விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.இதனால் குழந்தை அமைதியான மனநிலையுடனும் ஆரோக்கியமான உடல் திறனையும் பெற்று வளரதுடங்கும். 3. உடற்பயிற்சி மற்றும்   விளையாட்டு                             இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு சின்ன சின்ன உடற்பயிற்சி கற்று கொடுங்கள்.

வில்லாதி வில்லன் -ஹீத் லெட்ஜர்

படம்
             ஆஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வில்லன் ரோலுக்கு அதுவும் காமிக்ஸ் படத்தில் நடித்ததுக்காக விருது கிடைத்த ஒரே நடிகர் நம்ம ஹீத் லெட்ஜர் தான்.ஆனால் அந்த அவார்ட் வாங்கும் போது அவர் உயிரோடு இல்லைங்கிறது தான் துயரமான சம்பவம்.                வெறும் 29ம் வயதிலேயே மரணத்தை தழுவி தம்முடைய ரசிகர்கள் மனதில் நீங்கா துயரத்தை விதைத்து விட்டார்.குழந்தை பருவத்தில் சாதாரண ஆவரேஜ் குழந்தையாகவே வளம் வந்தார்.அவருடைய 11ம் வயதில் பெற்றோர்களுக்கிடையில் விவாகரத்தானது.அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய மூத்த சகோதரி மட்டுமே.ஆஸ்திரேலியாவில் ஒரு குணச்சித்திர நடிகையாக இருந்த தன் சகோதரியின் நடிப்பு திறமையை பார்த்து வளர்ந்த ஹீத்துக்கு நடிக்கும் ஆவல் வந்தது.நடிப்பை பற்றி எந்த வித கோர்ச்சுக்கும் போகாத ஹீத் துக்கு ஆரம்பம் முதலே சறுக்கல் தான்.நடிப்புக்காக ஆரம்ப கோர்சே முடிக்காத இவர்தான் பின்நாளில் வில்லன்களுக்கான இலக்கணத்தையே தன் நடிப்பின் மூலம் மாற்றி எழுதினான்.                  டி.சி காமிக்ஸ் வெளியிட்ட பேட்மேன் தி பிகினிங் படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைக்கவே, அதன் இயக்குனர்